அறிவாம் அறிவதில் எல்லையென ஏதும் இல்லையே - Poet Pavithran Kalaiselvan

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, June 25, 2015

அறிவாம் அறிவதில் எல்லையென ஏதும் இல்லையே

சுற்றும் பூமியின் பயணத்தில் நாளும் முடியும்,

முடியும் நாளின் கணத்தில் மற்றநாள் துவங்கும்

துவங்கும் பொழுதும் புலர கதிரும் விளையும்,

விளையும் நாளில் விழிக்கும் உயிர் வினையும்

வினையும் உயிரின் களைதீர விலைகதிர் கலையும்

கலையும் கவியும் பொருளாய் உருவாய் திரியும்

திரியும் உருவில் நீற்மட்டம் உற்றதாய் உறையும்,

உறையும் நீரில் உலர்ந்த தசையும் அசையும்

அசையும் தசையில் இசையும் ஓசையும் மொழியும்

மொழியும் பொருளும் விளங்கிடும் விளங்கா விதியாம்

விதியாம் விதியேன் விளித்து விளக்கபிறந்த மதியாம்

மதியாம் மதிப்பாம் மதிப்பில்லா பொருளாம் அறிவாம்

அறிவாம் அறிவதில் எல்லையென ஏதும் இல்லையே

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages