நானும் ஒரு ரீமேக் செய்றேன்.. - Poet Pavithran Kalaiselvan

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, April 12, 2017

நானும் ஒரு ரீமேக் செய்றேன்..

நானும் ஒரு ரீமேக் செய்றேன்....

நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.
வல்லமை தாராயோ, - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?

விசையுறு பந்தினைப்போல் - உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,
நசையறு மனங்கேட்டேன் - நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
தசையினைத் தீசுடினும் - சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன் - இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?

லவ் க்கு மாத்தலாம்...

மின்னுதோர் மேனி கொண்டும் - அதை
மண்தின்க அழிந்திட விடுவதுண்டோ..
சொல்லடி என்காதலி ..
எனை சுழலெனும் காதலில் சிக்க வைத்தாய்.
நல்விடை கூறாயோ.. இந்த நாயகன் நன்முறை வாழ்ந்திடவே?
சொல்லடி என் காதலி ...
எனை விதியென்று நோந்திட செய்வாயோ...

...வான்தெரி செங்கதிர்போல. - நெஞசம் வேண்டிடும் பதில்சொல்ல கேட்டேன்..
நாணறு அம்பினைபோல - நித்தம் உளனுருகு சுகம்தரும் முத்தம் கேட்டேன்..
உயிர்பிரி தருணமதிலும் - உன் முகத்தை காணுநல் வரங்கேட்டேன்..
இதமுறு காதல் கேட்டேன்.. இவை தருவதில் உனக்கென்னடி கெடு வந்ததோ...

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages