கிருஷ்ண காவியம் - Poet Pavithran Kalaiselvan

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, August 13, 2017

கிருஷ்ண காவியம்

பிறந்ததும் வேறிடம்
வளர்ந்ததும் வேறிடம்
கம்சனுக்கு பயந்துனை
காரிருளில் யமுனை
கடுமழையிலும் கடந்துனை
கொண்டுசென்ற வாசுதேவனை - வணங்கவேண்டும்.

செல்ல சேட்டைகளும்
கள்ள சில்மிஷங்களும்
விரும்பி செய்யுமுனை
கொஞ்சி வளர்த்தன்னை
விளையாடுங் கோபியரை
காதலுடைராதை பெண்ணை - வணங்கவேண்டும்..

வீரபல கொண்ட பலராமனும்
தீயகுணங் கொண்ட மாமனும்
நேயநயங் கொண்ட வார்தைதனை
கூறிப்பல ராமனையடக்கி அசுரனை
கூறாய்கிழித் தெரியும் வீரமதை
மாமனாகியும் நீசெய்த கம்சவதை - வணங்க வேண்டும்.

காடுகரடு மேய்ச்சலை
காணுமாடு கூச்சலை
தூயநற் குழலூதி மயக்குவனை
ஊதுதுர் சங்கென போரினை
நிகழ்த்துமுனை பார்த்த தேரினை
நிகழ்த்தியவாரே நேர்த்த சாதனை -வணங்கவேண்டும்..

கரம்ங்கூப்பிய வேண்டுதலை
தொலைவிருந்தும் தந்தனை
தொழும்நல் ஒழுக்கசீல பக்தனை
அழும்நிலை காட்டியதில் ஆட்கொண்டனை
அவல்தந்த அக்குசேல நண்பனை -வணங்கவேண்டும்

அகவைகள் இல்லாதோனை
அனைத்துளும் இருந்தோனை
அரும்பாடின்றி அடிபணிந் தடைவோனை
அகத்துள்ளும் புறத்துள்ளும் உள்ளோனை
அளந்திங்கு அமைப்பான் தோரணை
அவல்தின்று ஆக்குவான் செல்வனை -வணங்க வேண்டும்..

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages