ஹைக்கூவை போல் - Poet Pavithran Kalaiselvan

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, August 16, 2017

ஹைக்கூவை போல்

இங்கொரு மரணம்
அடுத்த வார்ட்டில்
இன்னொரு ஜனனம்

இறுதி ஊர்வலம்
முதலில் நடக்கிறது
ஒருக் குழந்தை

சானையின் சப்தம்
ரசிப்போர்க்கு
சாரங்கி இசை.

தூங்கா இரவு
தொலைதூர ரயில்
சப்தம் நிசப்தமாகிறது

கைக்குழந்தை உறங்குகிறது
அசந்துபடுக்கும் தாய்
அணைக்கும் கணவன்..

தேநீர் கோப்பை
வெளியே கொஞ்சம் மழை
சின்னதொரு கிறுக்கல்

பறக்கிறது பட்டாம்பூச்சி
மலரேதும் இல்லை
இலைகள் தேன் சொரிவதில்லை

வனம் எங்கும் சப்தம்
ஓடை நதியாகிறது.

வருகிறது மழை
குளத்தில் வீடுகள்
சாலையில் குளங்கள்..

நகரும் நதி
மிதிக்கும் இலை
இலைமீதொரு எறும்பு

பழைய மூங்கில்
துளைக்கும் வண்டு
ஏதோ காற்று
முதல் குழலிசை..

ஆசை ஆட்டுகுட்டி
அம்மு செல்லமென
அடுப்பில் வேகிறது..

சாலையில் சிக்னல்
கடைபிடிக்க யாருமில்லை

நல்ல வீணை
வாங்கத்தான் வந்திருந்தான்
விறகு கடையில்..

பெரிய ஆலமரம்
விழுதுகள் ஆடுகிறது
நினைவுகளில்..

சூரிய உதயம் இன்று
மேக மூட்டம்
வானிலை ஆராய்ச்சியின் பொய்..

கொழுத்த மரம்
மரக்கடையில் இழைக்கிறது..

பலமாடி கட்டிடம்
கொத்தனாருக்குதான்
காசில்லை ....

நல்ல கவிதை
வாசிக்கபட்டது
எண்ணை பஜ்ஜியால்..

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages