தமிழிற்கு திருப்புகழ் 2. - Poet Pavithran Kalaiselvan

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, October 27, 2017

தமிழிற்கு திருப்புகழ் 2.

ஏவினை நேர்விழி பாடலைக் கொண்டு....

ஏடினை நாடிய மாமுனி பாடிய
ஏகனும் விரும்பிடு - மொழியாகும்

வீணையும் யாழுடன் ஊதுநற் குழலொடு
பாடிட என்தமிழ் - இனிதாமே

மாமலை வாழ்ந்திடும் ஈசனும் வேலனும்
தான்வளர்த் தேத்திய - மொழிதானே.

மாநிலத் தாண்டிடு மாபெரும் மன்னரும்
மாபொருள் தந்திட - உவந்தாளே.

ஏவினை நேர்விழி பாடலைக் கொண்டு....

ஏடினை நாடிய மாமுனி பாடிய
ஏகனும் விரும்பிடு - மொழியாகும்

வீணையும் யாழுடன் ஊதுநற் குழலொடு
பாடிட என்தமிழ் - இனிதாமே

மாமலை வாழ்ந்திடும் ஈசனும் வேலனும்
தான்வளர்த் தேத்திய - மொழிதானே.

மாநிலத் தாண்டிடு மாபெரும் மன்னரும்
மாபொருள் தந்திட - உவந்தாளே.

பாவலர் பாடிட பாமரன் பேசிட
பாமலர் சூடிய - இளையோளே

நாடியர் நாவினில் கூடிய சொல்லிசை
நாதனை ஆண்டிடு - திருமொழியே

தேடியென் சிந்தையில் தேனமு தாகிய
தேன்மொழிச் சொல்லென - உறைவோளே..

பாவலர் பாடிட பாமரன் பேசிட
பாமலர் சூடிய - இளையோளே

நாடியர் நாவினில் கூடிய சொல்லிசை
நாதனை ஆண்டிடு - திருமொழியே

தேடியென் சிந்தையில் தேனமு தாகிய
தேன்மொழிச் சொல்லென - உறைவோளே..

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages