தமிழிற்கு திருபுகழ் - Poet Pavithran Kalaiselvan

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, October 25, 2017

தமிழிற்கு திருபுகழ்

On the type of muththai tharu pathi thirunagai...

ஒற்றைப்புகழ் பெற்றத் திருமொழி
நற்றைப்பெரு மங்கைக் கிணையவள்
கற்றைச்சுவை கொண்டப் பலகவி - எனகூறும்

மற்றைக்கிளை போன்றப் பலமொழி
தோன்றத்துணை என்றேப் புகழுடை
உற்றத்துறை கற்றப் பலரினை - தனைகொளும்

பற்றைப்பல கொண்டப் பெருமொழி
வித்தைப்பல தந்தக் குருவிவள்
மத்தைப்பல கண்டத் தேனமுது - தானவளும்.

ஏட்டைப்பிடி பாட்டாய் பிறந்தினும்
நாட்டற்படி  ஆட்டும் நிலையடை
வாட்டுத்துயர் தாண்டித் திளையென - பலபாடும்

முக்கண்னுடை மூத்த முதுமொழி
ஒக்கண்னென  ஒன்றில் பெருமையள்
தக்கஞ்செயு தக்கத் தகுதிகள் - பலவாகும்

வெட்டிற்பல சுக்குச் சுக்கென
மட்டிற்பல துண்ணித் துகளென
கட்டிற்பல நுண்ணிச் செய்யுளென - கூறாகும்.

மக்கட்புகழ் பெற்றத் திருமகள்
தக்கக்கவி பாட்டுக் கினியவள்
காக்கத்தலை  போற்றப் புனையது - அமுதாகும்.

அண்டும்துயர் கண்டும் வளமிவள்
தொண்டும்துணை கொண்டக் கிரியிவள்
விண்ணும்அணு கண்டப் பெருமையள் - தமிழாகும்.

மாண்டும்பலர் ஆண்டும் பனிமுகை
தாண்டும்புல புத்தென்ற இளமலர்
தூண்டும்புது பாட்டிற் புதியவள் - தாயெனவே

கற்றைச்சடை கங்கைக் கொண்டவன்
உற்றைத்திரு ஊற்றாய் நிறைந்தவன்
தற்றைத்தனை உற்றத் தாய்மொழி - எந்தமிழே.

நல்லாள்வுன் நீள்தாழ் வாழிய
அல்லற்பிணி நீங்கிச் செழிக்க
முல்லைப்பூ போன்றேப் பூத்துநீ - வாழியவே.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages