நன்று நமகொற்றம் - Poet Pavithran Kalaiselvan

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, February 26, 2018

நன்று நமகொற்றம்

மாண்டார் புகழ்பேசுவோம்
மாண்டு மண்ணாவாரைக்
கருத்தில் ஏற்றோம்

மானம் பலபேசுவோம்
மானத்தின் பொருள்
ஊழல் என்போம்

நாணிடு செயலென்போம்
நாணிடாது நாமதை செய்வோம்
கூனிக்கு அடுத்தோம்

அரசியல் நாற்றம் என்போம்
அந்நாற்றத்தை நாமே வளர்ப்போம்
தூய்மை தேசத்தோம்

சட்டமிட்டோம் பின்புலத்தே
சத்தமின்றி சாதித்துவிட்டோம்
சட்டத்தின்பால் வெள்ளையோம்

தேர்தலென்போம் ஓட்டிட்டு
தேர்வோம் என்போம் நோட்டுக்கு
தேர்ந்த தேர்தல் நாட்டோம்

தலைவன் என்போம் மரணித்தபின்
சிலை வைத்து சீரழிப்போம்
விடுமுறை விட்டு கடன்கழிப்போம்

மாநாடு என்று புகழ்வோம்
மாநாட்டுக்கு ரூபாய் கேட்போம்
மாநாட்டில் நீதிவுரையோம்

முதுகெலும்பு என்போம் அஃதின்றிக்
முன்னே கூனி நிற்போம்
தெருவெங்கும் பட்டதாரி என்போம் சோறுதானில்லை. என்போம்

சாதிக்கொரு அரசியல் திட்டமிடுவோம்
சர்சையை அதிலிருந்து வளர்போம்
நீதியென்று நூற்றாண்டுகளை இழப்போம்.

ஆகா நன்று நமகொற்றம்..

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages