சூழல் வர்ணனை.. - Poet Pavithran Kalaiselvan

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, March 25, 2018

சூழல் வர்ணனை..

வாள்பாயும் நோக்கில் விரவிவேல் பாயுமே
தோள்மோதி தோற்கின் தேசமது போகுமென
தாள்விரவி எய்வோர் தமதுயிர் பறித்து
ஆள்காக்கும் எம்மண் களிறு.



[ விளக்கம் - வாள்பாயும் திசையில் வேகமாய் வேல் பாயுமாம் வீரர்கள் தேளில் மோதி தோற்றால் தன் தேசமே போகுமென அஞ்சி கால்கள் வேகமாய் சென்று வேல் எய்தியவர்கள் உயிர் பறித்து தம் நாட்டு வீரர்களை காக்கும் எங்கள் நாட்டு யானை ]


கோன்தன் குரலுக்கு குன்றிடும் புரவிகளும்
மான்கள் நிறைந்த மாவனப்புள் வாழ்நாடு
கான்நிறைந்து நாணுங் கதிர்நிறைந்த தேசமிது
யான்மகிழ்ந்து பாடவிழை நாடு.


[ அரசன் சொல்லுக்கு அடங்கி செயல்படும் குதிரைகளும். மான்கள் நிறைந்த சிறந்த வனத்து மயில்கள் வாழும் . காடுகள் நிறைந்து வெட்கத்தால் மண்பார்க்கும் நெற்கதிர்கள் நிறைந்த. நான் மகிழ்ந்து  பாட விரும்பும் தேசம்]


வான்நிறை வெண்மதி யொத்த பெண்டிரும்
வான்தனை பிம்பிக்கும் பொய்கை பலவுடை
காண்கவே மகிழ்தருங் நன்நில தேசம்
மாண்புடை மாந்தர்தே சம்.


[ வனத்து பௌர்ணமி நிலவைப் போன்ற பெண்களும். வானத்தை பிம்பாய் காட்டும் குளங்கள் பலவும். பார்க்கவே மகிழ்ச்சி தரும் நல்ல நிலமும். உயர்வும் மாண்பும் உடைய மனிதர்களின் தேசம் ]


மையல்கொள் நன்நிலமும் மையலுறை நற்றமிழும்
மையங்கொள் நன்நாடு தையல் விரும்புநாடு
அயல்வாழ் மனமெல்லாம் புகழ்வார் உளநாடு
கயல்நிறை பொய்கைநிறை மண்..


[ காதல்கொள்ளும் படியான நல்ல நிலமும் காதலையே கொண்ட நல்ல தமிழும். மையமாய் நிற்கும் நல்ல நாடு. பெண்கள் விரும்பும் நாடு. மற்ற நாட்டில் வாழும் மனங்களெல்லாம் புகழும்படி உள்ள நாடு ]


வானமே வந்துவந் துப்பொழியுந் தேசம்
மானமே வாழ்வாய் உடையதோர் தேசம்
சேனமே வந்தும் திசையறியா தழியுமே
ஈனமே வந்திடா நாடு.


[ வானமே வந்து உவந்து மழை பொழியும் தேசம். மானமே வாழ்வாய் கொண்ட தேசம். போர்படையே வந்தாலும் வந்தவழி தெரியாமல் அழிக்கும் வீரமுள்ள தேசம். தாழ்வே வந்திடாத நாடு ]


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages