ஆசைகள் உண்டெனக்கு - Poet Pavithran Kalaiselvan

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, January 21, 2016

ஆசைகள் உண்டெனக்கு

ஆசைகள் உண்டெனக்கு 


அதிகாலையில் கதிரவன் சோம்பல் முறிப்பதை பார்க்க ஆசை
அந்திமாலையில் தாமரை தூங்குவதை ரசிக்க ஆசை


காடுகளுக்குள் உயர்ந்த மரக்கிளையில் உறங்க ஆசை

பசித்திடும் பொதெல்லாம் பகிர்ந்துகொள்ள ஆசை


புறாக்களின் கூட்டத்தினை வேடிக்கை பார்க்க ஆசை
ஆழ்கடலில் மிதந்தபடி தொடுவானம் சிவந்ததை பார்க்க ஆசை

பூப்பதற்கு முன் பூவின் சுகஅனுபவத்தை பார்த்திட ஆசை

நரிகளின் கண்ணீர் பார்க்க ஆசை
நடுஇரவில் தூற வயலின் கேட்க ஆசை


விடியுமுன் மூங்கில் காட்டின் சிறுங்கார குழல் கேட்க ஆசை

மழைக்கு முன் ஆடும் மயில் பார்க்க ஆசை
மழையால் சிலிர்க்கும் புல்வெளி பார்க்க ஆசை


நதியின் இசைகேட்க ஆசை
காற்றாற்றின் வெள்ள மேளம் கேட்க ஆசை


பாலைவனத்தின் மதிய வேளையில் தண்ணீர் குடிக்க ஆசை
பழங்கால புராணங்கள் படிக்க ஆசை
ஆசைகள் உண்டெனக்கு
அலையின் நுரையில் ஒரு குமிலாகும் ஆசை
பட்டாம்பூச்சியின் சிறகில் குடியேறும் ஆசை

பறவையுடன் கூட்டமாய் பறந்திட ஆசை
கானக்குருவியாய் குயிலாய் கிளியாய் பாடிட ஆசை

காா்மேகத்தில் சிலகணம் உருகிட ஆசை
கரைந்திட்டால் மழையாய் பொழிந்திட ஆசை


கவிதை எழுதும் காகிதமாகிட ஆசை
கவிதையோடு காற்றில் பறந்திட ஆசை

தீண்டா சிமிழாய் கற்புடன் இருக்க ஆசை
தூண்டா விளக்காய் ஞானம் பெற்றிட ஆசை

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages